கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Category Archives: மொக்கைகள்

நண்பேன்டா – 2 …

நண்பேன்டா சீரிஸ்ல ரொம்ப நாளா  பதியணும்னு நெனச்சேன், இப்போ தான் பதிய முடிந்தது…. (நண்பேன்டா – 1 படிக்க)

சென்னையில் 6 ஆம் வகுப்பில் நான் புதிய மாணவன் என்பதால், எனக்கு நண்பர்களே கிடையாது அல்லது யாரிடமும் பேச மாட்டேன். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், இருந்தும் வகுப்பறைகள் மட்டமாக இருக்காது. வகுப்பறைக்குள் சாப்பாட்டுக் கூடைகளை வைக்கும் இடம் எங்களுக்கு எதிரில் ப்ளாக் போர்டுக்குப் பக்கத்தில் இருக்கும். சிமன்ட்டினால் சுவற்றில் செய்யப்பட்ட ஒரு அலமாரி அது. 11.00 மணி இன்டர்வல் அல்லது பிரேக் விடும் போது மாணவச் செல்வங்கள் அனைவரும் எழுந்து போய் எங்கள் முன்னால் சிமன்ட்டில் செய்த அலமாரியில் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்து விட்டு சிலர் எதாவது பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் தண்ணீர் இறக்கி விட்டு வருவார்கள் (urinal). 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்திருக்கும் பணக்காரர்கள் காண்டீனில் வாங்கித் தின்பார்கள் பெரும்பாலும் சமோசா தான்.

நான் யாரிடமும் பேசாத காரணத்தால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் பெரும்பாலும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன். யாரிடமும் தண்ணீர் கேட்கவும் மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் மாட்டார்கள்.

அந்த காலத்தில் (1994), எவர் சில்வரினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் பிரபலம். அனைத்து பள்ளிச்சிறுவர்களும் அதை தான் பயன்படுத்துவார்கள். நானும் அதற்க்கு விதிவிலக்கு இல்லாததால் அதை தான் பயன்படுத்தினேன்.

நல்லதொரு செப்டம்பர் மாதத்தில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் பாட்டில் அடியில் ஓட்டையானதால், கொண்டு போன தண்ணீர் அனைத்தும் வீணாக ஆனது. இது தெரியாமல் 11.00 மணி பிரேக்கில் நான் தண்ணீர் குடிக்க சென்ற போது, காலியாக இருந்த பாட்டிலை பார்த்து அதிர்ச்சி ஆனேன். அந்த வயசுல இந்த மாதிரி மாட்டருக்கு தானங்க அதிர்ச்சி ஆவோம். பக்கத்தில் நின்றிருந்தவனிடம் தண்ணீர் கேட்க்க, அவன் கர்நாடகா, கேரளா மாதிரி “எனக்கே கொஞ்சம் தான்டா இருக்கு” னு சொல்ல, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பையன் “இந்தாடா குடி” என்று அவனுடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினான். நானும் வாங்கிக் குடித்து விட்டு பெஞ்சுக்கு போய் உட்க்கார்ந்தேன். குடிக்க தண்ணி குடுத்த பையன் கிட்ட கூட பேச மாட்டேன்க நானு (சைக்கோப் பைய, சைக்கோப் பைய…)

அவ்வளவு தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம். அது தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகமாக இருக்கும் என்பது கூட எனக்கு புரியவில்லை அப்போது. ஒரு நாள் அவனுடைய அண்ணன் (அவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தார்), தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லி அவனை எங்கள் வகுப்பில் கொண்டு வந்து விட்டார். நீண்ட விடுப்பில் இருந்து அப்போது தான் மறுபடியும் வகுப்புகளுக்கு திரும்பினான். அந்த சமயத்தில் கூட அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு. பின்பு அரையாண்டுத் தேர்வுகள் வந்தது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் சமயங்களில் மழைக் காலமாக இருக்கும். மழை பெய்தால், பள்ளி மைதானத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் செம்மண் கொண்டு வந்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இட்டு நிரப்புவார்கள்.

ஏதோ ஒரு பாடப் பரீட்சை முடிந்து முதல் மாடிப் படிக்கட்டுகளில் நான் கீழிறங்கி வரும் போது, அந்தப் பையனும் என்னுடன் சேர்ந்து கொண்டான். கீழே இறங்கி வரும் போது, அவன் என்னிடம் “டே  கிரவுண்டுல இருக்கற மண்ணெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா” னு கேட்டான். நான் “தெரியாது டா” னு சொன்னேன். அவன் “இந்த மண்ணெல்லாம் நம்ம ப்ரின்சிப்பால் மண்டேல இருந்து கொண்டு வந்தது டா” னு சொல்ல நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த வயதில் இதெல்லாம் மிகப் பெரிய ஜோக்காச்சே. அது தான் எனக்கும் அவனுக்குமான உண்மையான அறிமுகம். ஒவ்வொரு  பரீட்சை முடிந்தவுடன் என்னுடனே என் வீடு வரை வருவான், “வீட்டுக்குள்ள வாடா”ன்னு  கூட அழைக்க மாட்டேன். நான் வீட்டிற்குள் சென்ற பின், அவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்வான். அந்த சமயங்களில் என்னுடைய வீட்டிற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கு கூட பயமாக இருக்கும், ஏன் பயந்தேன் (படிக்க கொசுறு ‘2’).

அவன் வீடு எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருந்தது. என்னை வீட்டில் விட்டு விட்டு, எங்கள் பள்ளியை தாண்டி அவன் வீட்டிற்க்கு செல்வான் (நடந்து தான்).

இவ்வாறாக எங்கள் நட்பு, பள்ளியில் கண்ணா மூச்சி, கிரிகெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, பின்பு எல்லா நண்பர்களும் செய்யும் அனைத்து தப்பையும் தவறாமல் செய்து வளர்ந்தது. சென்னையில் எனக்கான இன்னொரு அற்ப்புதமான அறிமுகம் இவன் தான். இன்றும் என்னுடைய உற்ற நண்பனாக அடிக்கடி சண்டைகளுடனும், நிறைய பேச்சுகளுடனும் எங்கள் நட்பு தொடர்கிறது. காலஓட்டம், காலப்போக்கு, வைத்துப்போக்கு அனைத்திலும் எங்கள் நட்பு தொடரும் என்று நினைக்கிறேன்.

கொசுறு::

1. அவன் பெயர் சீனிவாசன். MBA (Tourism and Hotel Management) முடித்து விட்டு, தனக்கான சரியான களம் எது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றான் …

2. ஏன் பயந்தேன் என்பதை ஆராய வேண்டாம்… free yah உடுங்க …

3. இது சீனிவாசனுக்கு … இந்தப் பதிவை படித்து விட்டு, எனக்கு போன் செய்து நெஞ்சை நக்கினால், ____________________ (fill in the blanks with பேடு words) …

புதிய வலைப்பூ புத்தாண்டு 2011ல் ..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் …

இந்தப் புத்தாண்டு 2011 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் தர வேண்டும்.

அதற்கான அனைத்து திறமைகளையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.

***** ஒரு சின்ன அறிமுகம் ***** …

ஏற்கனவே நான் வேறு ஒரு பெயரில் ப்ளாக் எழுதி வந்துள்ளேன், இப்பொழுது இந்தப் புதிய பெயரில், புதிய வலைப்பூவில் எழுதுகிறேன்.

கேப்டன் டைகர் –> லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸில் வரும் ஒரு “சூப்பர் ஹீரோ” கவ்பாய் காரக்டரின் பெயர்.

பழைய ப்ளாக்கில் இருந்த பதிவுகள் இந்தப் புதிய ப்ளாக்கிலும் உள்ளது.

 

” Happy New Year 2011

இறையாண்மையும் …

திருமாவளவனின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. கண்டிப்பாக அவர் மாபெரும் எழுச்சியை கொடுப்பவர். அவரைப் பின்பற்றும் ஏராளமான தொண்டர்களைப் பார்த்தால் தெரிகிறது. முக்கியமாக அவரின் பர்சனாலிட்டி எனக்கு பிடிக்கும். நல்ல ஸ்டைலிஷ் ஆன மனிதர் என்ற வகையிலும், திருமண பந்தத்தை நினைக்காமல் மக்களை நினைத்து, மக்களுக்காக வாழும் அவரது தன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும். திசம்பர் 26, திருமாவின் “தமிழர் இறையாண்மை மாநாடு” மறைமலை நகரில் நடந்தது. அதற்க்கான அழைப்பிதழ்களில் இரண்டு இங்கே இருக்கிறது (ஆதரவாளர்களின் படங்கள் வெட்டப்பட்டுள்ளன, இவ்விரண்டு படங்களிலும்).

திருவண்ணாமலையில் இருந்து அரசுப் பேருந்தில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். 4.30 மணி நேரப் பயணம் தான். ஆனால் திசம்பர் 26 அன்று மதியம் 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் பஸ் ஏறி சென்னையில் வீட்டிற்கு சென்ற போது திசம்பர் 27 அதிகாலை 1.00 மணி.
ஏகப்பட்ட கார், சுமோ, குட்டி யானை, ஷேர் ஆட்டோ என்று வரிசை கட்டி ரோட்டில் போகாமல் பறந்து கொண்டிருந்தது NH – 45 யில். ஒப்பன் லாரி, குட்டி யானையில் சென்ற தொண்டர்கள் (!!??)  பஸ், கார்களில் சென்ற பொது மக்களிடம் படு கேவலமாக நடந்து கொண்டார்கள். இவர்களில் பல பொறுக்கிகள் (தொண்டர்கள்) (குடித்து இருந்தனர்) பக்கத்தில் சென்ற அரசுப் பேருந்துகள், கார்களில் சென்ற பொது மக்களிடம் முறை தவறி நடந்து கொண்டார்கள். பஸ்ஸின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்களைக் கிண்டல் செய்வது, அவர்களைப் பார்த்து சத்தம் போடுவதுமாக சென்றார்கள்.

தொண்டர்-பொறுக்கிகள் சிலர் தங்கள் கைகளை நீட்டி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்களை தொட முயற்சி செய்ததும் நடந்தது. மேல்மருவத்தூரில் வாகன நெரிசல்களில் இவர்கள் தங்கள் வாகங்களை வைத்துக் கொண்டு வீர சாகசம் புரிந்து கொண்டு சென்றார்கள். கொண்டு வந்த பிட் நோடீஸ்களை தங்கள் வாகனங்களில் இருந்து பிற வாகனங்களுக்கு நீட்டிக் கொண்டிருந்தனர் வண்டிக்குள் இருந்த படியே.

மேல்மருவத்தூர் நெரிசலில் ஒரு லாரி கிளீனர் அதை விருப்பத்துடன் வாங்க, திடீர் என்று அந்த லாரியை வழி மறித்து சுமோவை நிப்பாட்டி இறங்கிய இரண்டு பேர் ஏதோ சண்டை போடப் போய் பின் வண்டியில் ஏரிச் சென்றனர். மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்-பொறுக்கிகள் அனைவரும் பாம்பை விட மோசமாக வளைந்து நெளிந்து ரோட்டில் நடந்து சென்றனர். சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து மறைமலை நகர் ரயிலடி செல்ல சுமார் 2.45 மணி நேரம் ஆனது. அதற்க்கு மேல் பொறுமை இல்லாமல் பஸ்சில் வந்த நிறைய (எக்கச்சக்கம்) பயணிகள் இறங்கி மறைமலை நகர் ரயிலடி சென்றனர். இதனூடே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் இன்னொரு வழித்தடம் காலியாக இருந்தது. நிறைய வாகனங்கள் அந்த வழியையும் விட்டு வைக்காமல் அங்கும் சென்றனர் (wrong route).

நானும் எனது குடும்பத்தாரும் ரயிலடி சென்றோம். அங்கு பெரும் கூட்டம். அரை மைல் நீள கூட்டத்தில் நின்று டிக்கட் வங்கத் திணறி பெண்களுக்கான ‘Q’ வில் தங்கையை நிப்பாட்டி டிக்கட் எடுத்து(ஒரு வழியாக) கடுமையான கூட்ட நெரிசலில் பார்க் செல்லும் ரயில் ஏறும் போது மணி இரவு 10.45. கூட்ட நெரிசலை சரியாகப்  பயன்படுத்திய பொம்பள பொறுக்கிகளும் இருந்தனர். சென்ட்ரல் சென்றால் இரவு உணவுக்கு எந்த ஒரு கடையும் இல்லை. (இதுக்கு தான் மதுரைல இருக்கணும்)

இறையாண்மைனா என்னனு எனக்கு தெரியாது ஆனா பொது மக்களை தொல்லை பண்ணி, பெண்களை தொல்லை பண்ணி, குழந்தைகளை தொல்லை பண்ணி ஒரு கேடு கேட்ட தொண்டர் கூட்டத்தை வைத்துக் கொண்டு மாநாடு நடத்த வேண்டுமா என்பது தான் கேள்வி??. காவலர்கள் வழக்கம் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆண்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை , ஆனால் பெண்களின் நிலை??. இயற்க்கை உபாதைகளுக்கு எங்கு செல்வார்கள்??. தொலை தூரப் பிரயாணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். பஸ்ஸை விட்டு கீழ இறங்குனா ஒரே தொண்டர்-பொறுக்கிகள் தான். சாப்பாடு இல்லாம பசியில் எத்தனை பேர் அவஸ்தை பட்டு இருப்பாங்க (என்னைப் போல் பலர்) தனிப்பட்ட சிலரின் சக்தியைக் காட்ட பொது ஜனங்களைத் தொல்லை படுத்தியது மாபெரும் தவறு.  திருமாவின் தவறு என்று எதுவும் இல்லை இங்கே. தொண்டர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்அல்லது தவறும்  தலைவரைத் தானே நேரடியாக பாதிக்கும்.

கொசுறு::

1. தொண்டர்களில் நிறைய பேர் பார்க்க பள்ளிச் சிறுவர்கள் போல் இருந்தனர்.

2. மறைமலை நகரை அடுத்த கூடுவாஞ்சேரியில் டிராபிக் சுத்தமாக இல்லை

3. மேல்மருவத்தூரில் ஒரே ஒரு ambulance பார்த்தேன். உயிரை காப்பாற்ற திணறிக் கொண்டிருந்தது, வாகன நெரிசலில். உள்ளே இருந்த இருவர் கதவை திறந்து கீழே இறங்கி வழியை ஏற்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.

4. மேல்மருவத்தூரில் டிராபிக் ஜாமில் கண்ட ஒரு அற்புதக் காட்சி.. தொண்டர் (??) ஒருவர் சுமோவில் செல்கையில் பீர் பாட்டிலை வெளியே நீட்டி, ஆட்டிக் கொண்டே சென்றார்.

5. எதற்கு அடுத்த அம்பேத்கார், அடுத்த பிரபாகரன் போல ஜோடிக்க வேண்டும்?. தன்னுடைய ‘individuality’ ஐ எதற்கு இழக்க வேண்டும்? இவராகவே ‘இருந்து’ ஏதாவது சாதிக்கலாமே..!!!???. மக்களுக்கு நல்ல தலைவராக இருக்கலாமே.

6. பதியலாமா வேண்டாமா என்னும் தயக்கத்துடனும், ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையாலும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

7. வருடத்தின் கடைசிப் பதிவாக தயாரான இது, கடுப்பினால் விளைந்தது என்பதை நினைக்கும் போது சற்றே எரிச்சலாகத் தான் உள்ளது ..

(பதிந்தது 31-12-10)

======= GOOD BYE 2010 =======

********** WELCOME 2011 **********