கேப்டன் டைகர்

பஞ்ச் லைன் எதுவும் இல்லை ….

Monthly Archives: December 2010

சாருவிற்கு

ஹாய் சாரு,

நான் உங்கள் ரசிகன். என்னவோ தெரியவில்லை உங்களிடம் அப்படி ஒரு ஈர்ப்பு. உங்களிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்பதால் தான் இந்த விளக்கம். ‘just be open minded and read…’

*** புத்தன் சொன்னான், துன்பத்தின் காரணம் ஆசை என்று. ஜக்கியோ எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்கிறார். அவர் அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது ***

புத்தன் சொல்வதாக சொல்லப்படுவது, “ஆசை தான் துன்பத்திற்கு காரணம், அதனால் ஆசைப்படுவதை விடுங்கள்”.. ஆனால் சிறிது ஆழமாக யோசித்து பார்த்தால், ஆசைப்படுவதை விட்டுஒழிப்பது என்பதே மிக பெரிய ஆசை தான்.. இது என்னை போன்ற சாமானியனால் சிந்திக்க முடிந்தது. மிக பெரிய எழுத்தாளர் உங்களுக்கு புரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

*** நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். இது ஒரு பரஸ்பர முதுகு சொறியும் வேலை***

ஜக்கியால் நடத்தப்படும் யோக வகுப்புகளுக்கு சென்றால் தான் தெரியும், அவர்கள் நமக்கு பிடித்ததை (முதுகு சொரிவது) சொல்கிறார்களா அல்லது, நாம் இது வரை நினைத்து கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிரார்களா என்று.

*** இங்கே என்னுடைய கேள்வி என்னவென்றால், ஜக்கி விதவிதமாக உடுத்துகிறார். ஆனால் தன்னுடைய சீடர்கள் மட்டும் வெள்ளை அங்கியே அணிய வேண்டும் என்கிறார். ஏன் அப்படி என்று புரியவில்லை ***

அவர்கள் எப்பொழுதும் வெள்ளை நிற ஆடை அணிவதில்லை . இடத்திற்கு தகுந்தார் போல் தான் உடை உடுத்துகிறார்கள். அவர்கள் விளையாடும் போது (volley ball, etc) jeans, t-shirt கூட அணிகிறார்கள் . உங்கள் கவனிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும்.

*** ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அவர் இப்போது ஜக்கியிடம் ஐக்கியம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியவில்லை ***

புரியாத விஷயத்தைப்பற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை

*** ஒருமுறை ஜக்கியின் ஆசிரமம் சென்றிருந்தேன். அழகழகான இளம் பெண்கள் என்னை அணுகி என்னை மூளைச் சலவை செய்யும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். ஒரு பெண் உண்டியலைக் கொண்டு வந்து மூக்குக்கு முன்னால் நீட்டினார் ***

இது முற்றிலும் பொய் . நானும் சென்று இருக்கிறேன் . யாரும் அவ்வாறு மூளைச் சலவை போன்ற அபத்தங்களை செய்வதில்லை . தினமும் ‘tourists’ நிறைய பேர் வருகிறார்கள் . ஆனால் யாரிடமும் அவ்வாறு மூளைச் சலவை நடந்ததில்லை. உண்டியலைக் கொண்டு வந்து யாரும் நீட்டுவதில்லை . ஆனால் உண்டியல் இருக்கிறது , விருப்பம் இருப்பவர்கள் காசு போடுகிறார்கள் . யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. கவனிக்க: உங்கள் ‘website’ லும் உண்டியல் உள்ளது

*** ஜக்கியிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, இந்து மதத்தை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது. அப்படியானால் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோர் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் இல்லையா? ***

நீங்கள் அவர் பேசுவதை முழுவதுமாக கேட்கவில்லை என்று தோன்றுகிறது . (கடவுளால் படைக்கப்பட்டவர்கள்)மனிதனுக்கு வந்த முதல் பகுத்தறிவு , கலவியில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் (மதன் சொன்னது ). ஒரு தலை சிறந்த எழுத்தாளராக இருந்தும் இந்த சிறிய மற்றும் சீரிய விஷயத்தை கவனிக்க தவறி விட்டீர்கள்

*** இன்று நான் கருணாநிதியை, சோனியா காந்தியை, மன்மோகன் சிங்கை என்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதனால் எனக்குப் பாதகம் ஏற்படாது. ஆனால் ஜக்கியை விமர்சித்தால் என் எழுத்தே காலி ***

சிரிப்பு தான் வருகிறது , அப்படி அவரை விமர்சிக்கும் பத்து பேரில் நீங்களும் ஒருவர் . அவ்வளவே!!!

***ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் அவருடைய வழிகாட்டுதலில் ஒருமுறை கைலாஷை தரிசிக்க வேண்டும் போல் இருக்கிறது***

நன்று… செயல்படுத்தவும்

==========================================================================================

ஒரு தனிப்பட்ட ஆளையோ அல்லது ஒரு குழுவையோ சீர்தூக்கி பார்த்து தான் நாம் அதில் இணைய வேண்டும் ஆன்மீகத்தை பொறுத்த வரை . ஏனென்றால் மருத்துவரிடமும் ஆன்மீகவாதி இடமும் தான் மக்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள் – சொன்னவர் ஜக்கி தான்

வேல …

சமீபத்தில்  வேலை  வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. வேறு எதற்கு, எனக்கு M.E டிகிரி பதிவதற்காக. எல்லாரும்  தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பதாலும், என்னுடைய மாமா வேற “டேய், பதிஞ்சு வச்சுக்கோ டா, கவர்மென்ட் வேல தான் டா நிம்மதி” னு தொடர்ந்து சொல்லுவதாலும், வேறு வழியின்றி போனேன். இந்த பதிவே, அங்கே நான்  கண்ட சில அதிசயங்களை (!!!) பற்றி தான்.

அங்கே ஒரு ஆபீசர் இருக்கிறார். DEO (District Employment Officer) என்று போட்டிருந்த அறையில் தான் அமர்ந்தார். நடுவில் ஒரு போன் வந்த போதும் கூட, ஒரு ஊழியர் “டிஇஒ சார், உங்களுக்கு  போன்” என்று தான் சொன்னார். அந்த ‘DEO’ வை போல் வேறு எங்கும் பெரிய பதவியில் இருக்கும் (அரசு வேலையில்) ஆட்களிடம் ‘பொறுமையை’ நான் பார்த்தது இல்லை. மனுஷனுக்கு அநியாத்துக்கு பொறுமை.

சிலர் எல்லாம் பதில் சொல்லுவார்கள், இரண்டு அல்லது மூன்று கேள்விக்கு. சிலர் ஒரு அஞ்சாறு கேள்விக்கு பதில் சொல்லுவார்கள். ஆனால்  இவர் பதில் சொன்னதை பார்த்து நான் அசந்து தான் போனேன். ஒரு பத்து நிமிஷம் அவர்  பதில் சொல்லறத மட்டும் பாத்துகிட்டே இருந்தேன். நான் எதுக்காக அங்க ‘enquiry’ ல  நின்நேனோ, அத மறந்துட்டேன். அப்புறம் ஒரு வழியா அவரு என்னோட கேவலமான கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னாரு. ஒருத்தர் பொறுமையா பதில் சொல்றாருங்ரத பதிலோட ஆழத்த  வச்சு சொல்லலாம். உதாரணத்துக்கு, நம்ம ஹீரோ பதில்  சொல்றது எப்படினா, அங்க இருந்த கூட்டத்துலே ஒருத்தருக்கு பதில் சொல்லறாரு::
பதிவு பண்ண வேண்டிய அந்த  நபர் எந்த ஊர்லே பதியனும், அந்த ஊர் எந்த கோட்டத்துலே வருது, அந்த ‘office’ போன் நம்பர் (போன் நம்பர ஞாபகம் வச்சிருக்காரு), கொடுக்க வேண்டிய  மனு எப்படி இருக்கணும், எவ்ளோ ரூபா ஸ்டாம்பு ஓட்டனும், ஸ்டாம்ப்ப மனுவிலே எந்த இடத்துலே ஓட்டனும், இத்தன ஆழமா இருந்திச்சு அவரோட பதில்.

இன்னும் எத்தன ஆபீஸ் போன் நம்பர ஞாபகம் வச்சிருகாருனு தெரியல (உஸ்.. அப்பா). செய்யற வேலையில ‘love’ இருந்தா தான் இந்த அளவு ‘dedication’ இருக்கும். ஆங்… சொல்ல மறந்துட்டேனே, நம்ம டிஇஒ பாக்க ஆள் எப்பிடி இருப்பருன்னா, நல்ல உயரம் (5 ’11), நல்ல கலர் (எலுமிச்சம் பழம்), ஆள் எடுப்பான சட்டை, பேன்ட் போட்டு இருந்தாரு. வயசு எப்புடியும் 33 அல்லது 35 க்குள் இருக்கும். அந்த வயசுக்கே உரிய தொப்பயொடு இருந்தார்.

நிறைய வெளியூர்க்காரங்க, அவங்க ஊர்லே பதியனுங்க்றது தெரியாம, சென்னை வந்துட்டாங்க. அவங்களுக்கும் பொறுமையா எந்த ஊர்லே பதியனுனு சொல்றாரு. (ஒருத்தர் திருவாரூர்லே இருந்து சென்னை வந்துருக்காரு, ஆனா அவருக்கு பதிய வேண்டிய இடம் மதுரை (!!!!))…
பொதுவா வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிய வர்றவங்க எல்லார் முகத்துலயம் எப்படியாவது ஒரு அரசாங்க வேலைகிடைகாதானு ஒரு ஏக்கம்.

“எனக்கு இல்லனா கூட பரவா இல்ல என் மனைவிக்காவது அரசாங்க வேல கெடைக்கடும்”  என்ற எண்ணத்தோடு வந்தவர்களும் அதிகம். கர்ப்பிணி பெண்களும் கணவன்மார்களுடன் வந்து இருந்தனர்

ஆனா பாருங்க அங்கயும் ஒரு பொண்ணு பாய் பிரண்டோட வந்திரிச்சு. அங்க பதிவு செய்ஞ்ச ஸ்லிப் வாங்கறதுகாக எல்லாரும் வெயிட் பண்ணும் போது, அவங்க ரெண்டு பேரும் அவங்க வேலைய பார்க்க  ஆரம்பிச்சிடாங்க. அந்த பொண்ணு அப்பா என்ன பண்றாரு, எந்த ‘businees’ ல shares இருக்கு, இப்படி எல்லாத்தயும் சொல்ல ஆரம்பிச்சிடாங்க. (நான் ஒட்டு கேகலீங்க, சாதரணமா தான் ஒக்கார்ந்து இருந்தேன் அவங்க பேசிகிட்டது என் காதுல விழுந்தது)

அரசு அலுவலகமாச்சே ஏதாவது குறை::

குறைகள் கண்டிப்பா இருந்தது தான், எப்படிப்பட்ட குறைகள்னா, பதிவு செய்த பின் ரசீது சரியான நேரத்துக்கு கிடைப்பதில்லை, சிலருக்கு ரசீதில் சின்ன சின்ன பிழைகள் இருந்தது.  ஆனால் இதையெல்லாம் தாண்டி அன்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அந்த டிஇஒ வின் நடவடிக்கை தான் மேலோங்கி இருந்தது.

கொசுறு::
அவரோட பேர கேக்க மறந்துட்டேன்.. ச்சே !!!

49 ‘ஓ’

ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது நானும் சில நண்பரகளும் சம கருத்துள்ளவர்களுமாக சேர்ந்து ஓபோடு என்ற பிரசார இயக்கத்தை நடத்தினோம்.எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு. இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும். அப்போது வெளியிட்ட பிரசுரத்திலிருந்து இதோ:

ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும்.

ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.

அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

அதுதான் 49 ஓ.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.

ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது ‘இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது’ என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி – 49 ஓ.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.

ஓ’ போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஓ’ போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.
இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

– நன்றி
ஞானி